Skip to main content

சமூகத்திற்குச் சொந்தமான தீர்வுகள்

Site: OpenLearn Create
Course: 1 அடிப்படை எண்ணக்கருக்கள் Tamil
Book: சமூகத்திற்குச் சொந்தமான தீர்வுகள்
Printed by: Guest user
Date: Friday, 19 April 2024, 3:27 PM

1. சமூக நிலைப்பேற்றுத்தன்மையை அறிமுகப்படுத்துதல்

நிலைப்பேற்றத்தன்மை அல்லது ஒப்பேறு நிலை என்பது உயிர்வாழ்வது, ஆரோக்கியமாக இருப்பது மற்றும் செழிப்படைவதாகும். இருப்பினும், ஒரு சமூகத்திற்கு இது எளிதானது அல்ல. சில நேரங்களில் நிலைமைகள் நிலையானது, சில நேரங்களில் நிலைமைகள் இயல்பிலிருந்து மாறுபடும், சில நேரங்களில் விடயங்கள் என்றென்றும் மாறும். எனவே ஒரு சமூகம் தொடர்ந்து எதிர்வினையாற்ற வேண்டும் மற்றும் அதன் சூழலுக்கு ஏற்ப மாற வேண்டும். இந்த சூழல் வானிலை, தாவரங்கள் அல்லது விலங்குகள் போன்ற பௌதீக சூழ்நிலையாக இருக்கலாம். இருப்பினும், சுற்றுச்சூழல் பொருளாதார, கலாச்சார, அரசியல், சட்ட மற்றும் சமூக காரணிகளையும் உள்ளடக்கியது. பரந்த சூழலின் பல்வேறு அம்சங்களைச் சமாளிக்க சமூகங்கள் உத்திகளை உருவாக்க வேண்டும் மேலும் அதிகரித்து வரும் பல்வேறு சவால்களைச் சமாளிக்க அவர்களின் அனைத்து உயிர்வாழும் உத்திகளும் கையில் இருப்பதை உறுதி செய்ய அவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

கீழேயுள்ள சமூக நிலைப்பேற்றுத்தன்மை வரைபடம் தென் அமெரிக்காவின் கயானா முழுவதும் உள்ள பழங்குடி சமூகங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட தகவலைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது. இந்த சமூகங்கள் தொலைதூர காடு, ஈரநிலம் மற்றும் சவன்னா பகுதிகளில் வாழ்கின்றன, பெரும்பாலும் காடுகளில் வாழ்வாதார விவசாயத்தை நம்பியுள்ளன, வேட்டை மற்றும் உணவுக்காக மீன்பிடித்தல் மற்றும் பல்வேறு கலாச்சார மற்றும் மொழி பாரம்பரியங்களைக் கொண்டுள்ளன.


கீழேயுள்ள பட்டியலில் உள்ள ஒவ்வொரு வகை சமூக நிலைப்பேற்றுத்தன்மைக்கும், பழங்குடி சமூகங்கள் தங்களுக்கு முக்கியமான பல்வேறு உயிர்வாழும் உத்திகளை அடையாளம் கண்டுள்ளன. இவற்றில் சில ஒன்றுக்கு மேற்பட்ட வகைகளுக்கு பொருத்தமானவையாக இருக்கலாம், ஆனால் ஒரு சமூகத்தில் பலவிதமான உயிர்வாழும் உத்திகள் உள்ளன என்பதைக் காட்டுவதே வரைபடத்தின் நோக்கமாகும். இது சமூகங்களுக்குள் உள்ள பதட்டங்களை/கருத்து வேறுபாடுகளைக் காட்ட உதவுகிறது. உதாரணமாக, அடிப்படை இருப்புக்கான வளங்களை  நீங்கள் சேகரித்தால், மற்ற சமூகங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு குறைவான வளங்கள்  உள்ளன என்று அர்த்தம். உங்களின் பல உத்திகள் மாற்றத்தை எதிர்க்கின்றன மற்றும் உங்கள் சமூகத்தின் அடையாளத்தை பராமரிப்பதையே முக்கியமாக செய்கின்றன  என்றால், இது புதிய மாற்றங்களுக்கு பின்பற்றுவதற்காக வளங்களை குறைக்கலாம். ஒரு சாத்தியமான அல்லது ஆரோக்கியமான சமூகம் என்பது பல்வேறு சமூக நிலைப்பேற்றுத்தன்மை வகைகளுக்கு இடையே உத்திகளின் சமநிலையை பேணுவதொன்றாகும்.

இலங்கையின் கொழும்பில் நகர்ப்புற ஈரநிலங்களுடன் வாழும் ஒரு சமூகக் குழுவால் பயன்படுத்தக்கூடிய பல்வேறு உயிர்வாழும் உத்திகளுக்கு கீழே உள்ள சமூக நிலைப்பேற்றுத்தன்மை வரைபடம் ஒரு எடுத்துக்காட்டு.

Illustration of community survival strategies

நிலைப்பேற்றுத்தன்மையின் வகைகள்

1. நமது அடிப்படைத் தேவைகளை நாம் எவ்வாறு பூர்த்தி செய்வது? –சாதாரண சுற்றுச்சூழல் நிலைமைகளின் கீழ் இருக்க, உங்களுக்கு உணவு, நீர், தங்குமிடம் மற்றும் எரிபொருள் போன்ற அடிப்படை வளங்கள் தேவை.

2. மற்றவர்களுடன் நாம் எவ்வாறு வேலை செய்கிறோம்? -பிற சமூகங்கள் மற்றும்/அல்லது நிறுவனங்கள் மற்றும் சமூகத்திற்கு வெளியே உள்ள நிறுவனங்களுடன் இணைந்து வாழ, உங்களுக்கு நல்ல உறவுகள் தேவை.

3. நம் அடையாளத்தை நாம் எவ்வாறு பேணுவது? - சூழலில் தற்காலிக மாற்றங்களை எதிர்த்து நிற்க, நீங்கள் மரபுகளில் கவனம் செலுத்த வேண்டும்.

4. புதிய சவால்கள் மற்றும் தாக்கங்களுக்கு நாம் எவ்வாறு இசைவடைந்துள்ளோம்? - சூழலில் பெரிய மற்றும் நிரந்தர மாற்றங்களுக்கு ஏற்ப, புதிய விடயங்களைச் செய்ய நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

5. நமக்கு எது தெரிவு மற்றும் நெகிழ்வுத்தன்மையை அளிக்கிறது? - மிகவும் மாறுபட்ட சூழலில் நெகிழ்வாக இருக்க, உங்களுக்கு அதிக தெரிவுகள் இருக்க வேண்டும்.

6. ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் வினைத்திறனாக இருக்க நமக்கு எது உதவுகிறது? - சூழலில் வளங்கள் பற்றாக்குறையாக இருக்கும்போது வெற்றிபெற, நீங்கள் வினைத்திறன் மிக்கவராக மாற வேண்டும்.

2. சமூகத்திற்குச் சொந்தமான தீர்வுகளை அறிமுகப்படுத்துதல்

சமூகத்திற்குச் சொந்தமான தீர்வுகள் என்பது ஒரு சமூகத்திற்குள் ஏற்கனவே காணப்படும் திறன்களை ஊக்குவிக்கும் ஒரு அணுகுமுறையாகும். இந்த வகை அணுகுமுறை பலத்தின் அடிப்படையிலான அணுகுமுறை (strengths-based approach) என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு சமூகத்தினதும் சமூகத்தில் உள்ள தனிநபர்களினதும் திறன்கள், அறிவு, உறவுகள்  மற்றும் ஆற்றல்களை மையமாகக் கொண்டு ஆராய்கிறது.

People of all ages and genders sat in a circle on chairs holding a community meeting

இந்த எண்ணக்கரு சமூகத்திலிருந்து நேர்மறையான நடைமுறைகளை அடையாளம் கண்டு அதன் பயன்பாட்டை ஊக்குவிப்பதன் மூலம் எதிர்மறையான நடத்தைகளில் கவனம் செலுத்துவதோடு அவற்றை சமூகத்தின் வெளியில் இருந்து தோன்றிய தீர்வுகளுடன் சரிசெய்ய முயற்சிப்பதன் மூலம் ஒரு சமூகத்தில் உள்ள சவால்களை சிறப்பாக தீர்க்க முடியும் என்ற அவதானிப்புகளிலிருந்து வருகிறது. (அட்டவணை 1).

Comparison of a problem-based expert led compared to a strengths-based community led approach

People queueing to collect food parcels distributed by an aid agency

சமூகத்திற்கு சொந்தமான தீர்வுகள் சமூகங்களால் உருவாக்கப்பட்டு செயற்படுத்தப்படும் நடைமுறைகள். இந்தத் தீர்வுகள் தற்போதைய மற்றும் எதிர்காலத்தில் சமூகங்களின் நல்வாழ்வுக்குப் பங்களிக்கின்றன. அவை சமூகங்களுக்காக, சமூகங்களால், சமூகங்களில், பிற பங்குதாரர்களிடமிருந்து சிறிதளவு செல்வாக்குடன் தோற்றம் பெற்று, வளர்ச்சியடைந்து, நடைமுறைப்படுத்தப்படுகின்றன. அவை சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் நியாயமானவை என்பதுடன், அவை சுற்றுச்சூழலை எதிர்மறையாக பாதிக்காது.

"சமூகத்திற்கு சொந்தமான தீர்வு" என்றால் என்ன

  • சமூகத்திற்கு அது தேவை
  • சமூகம் அதைச் செய்கிறது
  • சமூகம் அதைக் கட்டுப்படுத்துகிறது
  • இதன் மூலம் சமூகம் பயனடைகிறது
  • இந்தத் தீர்வு நியாயமானது
  • இந்தத் தீர்வு சுற்றுச்சூழலுக்கு நன்மையானது
  • தீர்வு தன்னிலேயே தங்கியிருப்பதுடன், நீண்டகால வெளிப்புற ஆதரவை சார்ந்தது அல்ல.

சமூகத்திற்குள் இருந்து பல சமூகத்திற்குச் சொந்தமான தீர்வுகள் உருவாக்கப்பட்டாலும், கருத்துகளும் வெளியில் இருந்து வெளிப்படலாம். இவை சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு மாற்றியமைக்கப்பட்டால், அவை சமூகத்திற்குச் சொந்தமான தீர்வுகளாக மாறும். எவ்வாறாயினும், இந்த கண்டுபிடிப்புகள் சமூக தீர்வுகளை குறைத்து மதிப்பதை விட, சமூகத்தின் பலத்திற்குப் பொருந்த வேண்டும் மற்றும் ஆதரிக்க வேண்டும்.

Drawing showing a community receiving food parcels and a photo showing traditional cultivation techniques

ஒரு சமூகத்தின் உணவுப் பாதுகாப்புக்காக உணவை இறக்குமதி செய்வது ஒரு தற்காலிக தீர்வை வழங்கலாம் ஆனால் அது தங்கிவாழும் நிலையையும் வலுவிழந்த தன்மையையும் உருவாக்குகிறது. உணவுப் பாதுகாப்புக்கான உள்ளூர் தீர்வுகளை ஊக்குவிப்பது (உணவு உற்பத்திக்கான உள்ளூர் நுட்பங்கள் மற்றும் அறிவு போன்றவை) வலுவூட்டலாகும் என்பதுடன் அது சுயாதீனத்தன்மையை ஊக்குவிக்கிறது.

சமூகத்திற்குச் சொந்தமான தீர்வுகளை ஏன் பதிவு செய்து பகிர வேண்டும்?

சமூகத்திற்குச் சொந்தமான தீர்வுகளை பதிவு செய்யவோ அல்லது வெளி பார்வையாளர்களுக்கு அவற்றைக் காண்பிக்கவோ இல்லாமல் நீங்கள் எளிதாக அடையாளம் காணலாம். எனினும் காட்சிப் பதிவு மற்றும் பகிர்வு பின்வரும் நன்மைகளை வழங்குகிறது:

  • ஒரு சமூகத்திற்குள் ஒரு தீர்வு நன்றாக வேலை செய்தால், இதேபோன்ற சவாலை எதிர்கொள்ளும் மற்றொரு சமூகத்திற்கு இது ஒரு உத்வேகமாக பயன்படுத்தப்படலாம்.
  • ‘பிற சமூகங்களுடன் நேரடியாகப் பகிர்ந்துகொள்ளும் சமூகங்கள்’ நிபுணர் தலைமையிலான செயல்முறையை சவாலுக்கு உட்படுத்துகிறது, அங்கு ‘நிபுணர்கள் தங்கள் கருத்துக்களை சமூகங்களின் மீது திணிக்கிறார்கள்’. பகிர்ந்து கொள்ளும் சமூகங்கள் ஒருவருக்கொருவர் பிரச்சினைகளைப் புரிந்துகொள்வதற்கும் சிறந்த தீர்வுகளைக் கண்டுபிடிப்பதற்கும் அதிக வாய்ப்பு உள்ளது. தீர்வுகள் குறைவான தத்துவார்த்தமானவை, மிகவும் யதார்த்தமானவை மற்றும் ஈடுபாடுகூடியவை என்பதுடன், நிஜ வாழ்க்கையில் விடயங்கள் உண்மையில் எவ்வாறு நிகழ்கின்றன என்பதைக் காட்டுபவையாகும்.
  • ஆரம்பத்தில் பங்களிப்பதற்காக பங்கேற்கத் தயங்கிய, பின்வாங்கிய மக்களை ஊக்குவிக்க முடியும், ஏனெனில் அவர்கள் உடனடியாக அடையாளம் காணக்கூடிய பெறுபேறுகளைப் பார்க்கிறார்கள்.

2.1. 'சிலி நாட்டின் உருளைக்கிழங்கு உவமை'

'சமூகத்திற்குச் சொந்தமான தீர்வுகள்' என்பதன் ஒரு உதாரணம், இப்போது பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலரும் சமூக ஆர்வலருமான போல் ஹாக்கனால் (Paul Hawken) விளம்பரப்படுத்தப்பட்ட 'சிலி நாட்டு உருளைக்கிழங்கின் உவமை'. ஆரி டி கியஸ் (Arie de Geus) இந்த உவமையை இவ்வாறு விவரிக்கிறார்:

'சிலி நாட்டின் உருளைக்கிழங்கு உவமை'

சிலி நாட்டின் பொருளாதாரம் சிக்கலில் இருந்த ஒரு காலம் இருந்தது, ஏனென்றால் அங்கு ஏற்றுமதியை விட அதிகமாக இறக்குமதி செய்யப்பட்டது, அதனால் பொருளாதாரம் செயலிழந்தது. காரணம் தெளிவாகத் தெரிந்தது: சிலி இனி தனது சொந்த உணவை உற்பத்தி செய்ய முடியாது மற்றும் இறக்குமதியை அதிகளவில் நம்ப வேண்டியிருந்தது. அமெரிக்கா உதவிக்கரம் நீட்ட முடிவு செய்து பிரச்சனையை ஆய்வு செய்ய விவசாய நிபுணர்கள் குழுவொன்றை அங்கு அனுப்பியது.

அக்குழு சாண்டியாகோவுக்குப் பறந்து பின்னர் ஆண்டிஸ் மலைப்பகுதிக்குச் சென்றது. ஆண்டிஸ் தான் உருளைக்கிழங்கு உருவான இடம்; சிலியில் இன்னும் அதுவே பிரதான உணவாக விளங்குகிறது. உருளைக்கிழங்கானது மலைப்பகுதிகளில் கணிசமான உயரத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வளர்ந்து வந்துள்ளது.

அமெரிக்க நிபுணர்கள் சென்று உருளைக்கிழங்கு வயல்களைப் பார்வையிட்டனர். வயல்கள் செங்குத்தான மலைப்பகுதிகளில் இருந்தன. அவை மிகவும் ஒழுங்கற்ற வடிவங்களைக் கொண்டிருந்தன மற்றும் மிகவும் கற் பகுதிகளாகவும் இருந்தன. ஒவ்வொரு வயலிலும், 10 அல்லது அதற்கு மேற்பட்ட உருளைக்கிழங்கு வகைகள் வளர்வதை நிபுணர்கள் கண்டறிந்தனர். வட்ட உருளைக்கிழங்கு மற்றும் நீண்ட உருளைக்கிழங்கு, சிவப்பு, வெள்ளை மற்றும் நீல உருளைக்கிழங்குகள் இருந்தன; மற்றும் நிபுணர்களின் அவதானிப்புப் படி - சில தாவரங்கள் பல உருளைக்கிழங்குகளை உற்பத்தி செய்தன, மற்றவை மிகக் குறைவானவை. இது மிகவும் வினைத்திறன் குறைந்ததாக தோன்றியது.

அறுவடை காலத்தில் கிராமவாசிகள் தோண்டுவதற்கான சரியான முறையைப் பின்பற்றவில்லை என்று  நிபுணர்கள் கருதினர் , மேலும் அவர்கள் உருளைக்கிழங்கை சேகரிக்கும் விதத்திலும் கிட்டத்தட்ட 'சோம்பேறியாக' இருப்பதாக கருதினர். சில வயல்களின் மூலைகளில் உள்ள பல செடிகள் கவனிக்கப்படாமல் காடாக வளர விடப்பட்டிருந்தன. அதற்குள் நிபுணர்கள் தங்கள் முடிவுகளை எட்டினார்கள். அவர்களின் கணிப்புகள் சந்தேகத்திற்கு இடமின்றி, விதை உருளைக்கிழங்கை மிகவும் கவனமாகத் தேர்ந்தெடுப்பது, அதிக விளைச்சலைத் தரும் வகைகளுக்கு மாறுதல் மற்றும் முறையாக களையெடுத்தல் மற்றும் பயிர்களை அறுவடை செய்தல் ஆகியவை வருடாந்த பயிரை குறைந்தது 15%அதிகரிக்கும். வசதியாக இது நாட்டின் உணவு உற்பத்தியில் ஏற்பட்ட பற்றாக்குறையை சமன் செய்தது, ஒரு வேலையை நன்றாக செய்து முடித்த உணர்வோடு அந்த குழு மீண்டும் அமெரிக்காவிற்கு சென்றது.

ஆனால் அந்த ஆலோசனை தவறானது. நிபுணர்களின் விஞ்ஞானபூர்வமான அணுகுமுறை எப்படி இருந்தாலும், ஆண்டிஸில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் உருளைக்கிழங்கு பயிரிட்டதை அடிப்படையாகக் கொண்டு திரட்டப்பட்ட உள்ளூர் அனுபவத்துடன் அவர்களால் போட்டியிட முடியவில்லை.

தங்கள் வாழ்நாள் முழுவதும் மலைகளிலேயே இருந்த சிலி கிராமவாசிகள், பலவிதமான பயங்கரமான விடயங்கள் தங்கள் உருளைக்கிழங்குக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை அறிந்திருந்தனர். வசந்த காலத்தில் தாமதமாக இரவு உறைபனி அல்லது கோடையில் கம்பளிப்பூச்சி தாக்கம் இருக்கலாம். பூஞ்சை காளான் உருளைக்கிழங்கு உருவாகுமுன் அல்லது குளிர்காலம் வருமுன் தாவரங்களை அழிக்கக்கூடும். பல வருடங்களாக, இந்த பிரச்சனைகள் ஒவ்வொன்றும் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன.

ஒரு புதிய பிரச்சனை ஏற்படும் போதெல்லாம், கிராமவாசிகள் தங்கள் வயல்களுக்குச் சென்று எல்லா இடங்களிலும் பார்க்கிறார்கள் - மூலைகளிலும், பாறைகளுக்கு அப்பாலும் மற்றும் களைகளுக்கு நடுவிலும் - எஞ்சியிருக்கும் உருளைக்கிழங்கு செடிகளையும் பார்க்கிறார்கள். எஞ்சியிருக்கும் தாவரங்கள் மட்டுமே சமீபத்திய நோய்த் தாக்கத்திலிருந்து பாதுகாக்கப்படுகின்றன. அறுவடை காலத்தில் கிராமவாசிகள் தப்பிப்பிழைத்தவைகளை கவனமாக தோண்டி பெறுமதியான உருளைக்கிழங்கை மீண்டும் தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் செல்வார்கள். அவர்களும் அவர்களுடைய குழந்தைகளும் குளிர்காலப் பஞ்சத்தை அனுபவிக்க வேண்டியிருக்கும், ஆனால் குறைந்தபட்சம் அடுத்த ஆண்டு உருளைக்கிழங்கு அவர்களிடம் இருந்து ஒரு புதிய தொடக்கத்தை உருவாக்க முடியும். அவர்கள் ஒரு குறிப்பிட்ட விவசாய நடைமுறைகள் அல்லது ஒரு குறிப்பிட்ட வகை உருளைக்கிழங்கிற்குள் முடக்கப்படவில்லை; அவர்கள் பயிர்ச்செய்கை செய்த விதம் திறன் குறைந்ததாக தோன்றினாலும்,  அவர்களுடைய அன்றாட நடைமுறையில் பன்முகத்தன்மை பரவியிருக்கிறது, இது எதிர்கால சவால்களை எதிர்கொள்ள அனுமதிக்கிறது.

ஆரி டி கியூஸ் (1997) த லிவிங் கம்பெனி, ப 177-179

A person carrying a bundle of plants on their head which they have just harvested

Now, after having finished this book, make sure to go back to the main page and complete activity 3.