பங்கேற்பு என்பது சமூகத்தைச் சேர்ந்த மக்களின் செயற்திறமான ஈடுபடாகும். சமூகத்திற்குச் சொந்தமான தீர்வுகளை வெற்றிகரமாக அடையாளம் காண, முடிந்தவரை உள்ளூர் சமூகத்தின் உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டும், இது அவர்களின் நோக்குகள், அவர்களின் ஈர நிலங்கள் சம்பந்தமான அறிவு மற்றும் அவர்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறது.
சமூக பங்கேற்பின் முக்கிய நோக்கம், ஒரு குழுவிற்குள் நம்பிக்கையை உருவாக்குவதாகும், இதனால் சமூகத்திற்குச் சொந்தமான தீர்வுகளுக்கு பலதரப்பட்ட கருத்துக்கள் பிரதிநிதித்துவம் செய்யப்படும். நீங்கள் பணிபுரியும் சமூகத்திற்குள் தகவல் தெரிவித்தல், ஆலோசனை மற்றும் ஒப்புதல் பெறுதல் ஆகியவற்றுடன் பங்கேற்பு தொடங்குகிறது. பெட்டி 1 மக்கள் பங்கேற்பை ஊக்குவிக்க உதவும் சில முக்கிய விடயங்களை கோடிட்டுக் காட்டுகிறது.
சமூக பங்கேற்பை எப்படி ஊக்குவிப்பது
இந்த பாடத்திட்டத்தில், சமூகத்துடன் பல்வேறு நிலைகளில் பங்கேற்பு இருப்பதையும், பல்வேறு நுட்பங்களைப் பயன்படுத்த முடியும் என்பதையும் நீங்கள் காணலாம். இந்த பிரிவில் உள்ள செயற்பாடுகள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தனிநபர்களை உள்ளடக்கியிருக்கலாம், அல்லது காலம் மற்றும் ஏற்பாட்டுக் கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப முழு சமூகத்தையும் ஈடுபடுத்தலாம். பின்வருபவை மக்களை ஈடுபடுத்த பயன்படும் பல்வேறு வகையான அணுகுமுறைகள் பற்றிய தகவல்களை வழங்குகிறது.