வடக்கு ருபுனுனி, கயானாவில் உள்ள ரூபர்டீ சமூகத்துடன் தயாரிக்கப்பட்ட புகைப்படக் கதையை எடுத்துக்காட்டும் படங்கள், சமூகத்தின் நம்பகத்தன்மையின் சில அம்சங்களை விளக்குகின்றன.
எமது அடிப்படைத் தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்கிறோம்? நிலம் அச்சமூகத்திற்கு அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கான பல்வேறு ஆதாரங்களை வழங்கியது, அதாவது சிங்கிள்ஸ் மற்றும் கோக்ரைட் இலைகள் வீடுகளுக்கான கூரையினையும் மரவள்ளிக்கிழங்கு போன்ற பாரம்பரிய உணவுகளான மரவள்ளிக்கிழங்கு ரொட்டி மற்றும் உள்ளூர் பானமான காசிரியை தயாரிப்பதற்கான காசிரி உருளைக்கிழங்கு ஆகியவற்றை நடுவதற்கான விவசாய நிலங்களையும் வழங்கியது.
எமது அடையாளத்தை நாம் எப்படி பேணுகிறோம்? மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்களை உயிர்ப்புடன் வைத்திருக்க, சமூகம் ஒரு கலாச்சார கற்றல் மையத்தை நிறுவியுள்ளது; மொழி, கைவினைக் கலை, கதைகள், பாடல்கள் மற்றும் நடனம் உள்ளிட்ட உள்ளூர் மரபுகள் மற்றும் கலாச்சாரத்தை இளம் தலைமுறையினருக்கு இங்கே கற்பிக்கப்படுகிறது.
எது எமக்கு தெரிவையும் நெகிழ்வுத்தன்மையையும் அளிக்கிறது? வயிற்றுப்போக்குக்கு சிகிச்சையளிக்க கொய்யா மற்றும் முந்திரி பட்டை கலவை போன்ற நவீன மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மருந்துகளால் சமூக உறுப்பினர்கள் தங்கள் ஆரோக்கியத்தை பேணுகின்றனர். உள்ளூர் கிளினிக்குகள் சிறுவர் சுகாதாரம் மற்றும் பல் மருத்துவம் போன்ற சேவைகளை வழங்குகின்றன.