Site: | OpenLearn Create |
Course: | 6 சமூக ஈரநில முகாமைத்துவம் Tamil |
Book: | நீர் மற்றும் ஈரநிலங்களுடனான நமது உறவு |
Printed by: | Guest user |
Date: | Saturday, 18 May 2024, 8:36 PM |
நீர் வாழ்க்கைக்கு அடிப்படை. அனைத்து உயிரினங்களும் உயிர்வாழ நீர் தேவை. நீர் உலகளாவிய கரைப்பானாகக் கருதப்படுகிறது, ஏனென்றால் வாழ்க்கைக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அதற்குள் கரைந்து போகும். எனவே தண்ணீர் ஒரு முக்கியமான விநியோக பொறிமுறையாகும், இது முக்கிய ஊட்டச்சத்துக்களை ஒரு உயிரணுக்குள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு சென்று நாமும் மற்ற உயிர்களும் வாழ உதவும்
தண்ணீரின் தனித்துவமான விடயம் என்னவென்றால், மூன்று நிலைகளும் (திரவ, திண்ம மற்றும் வாயு) இயற்கைச் சூழலில் இயற்கையாகவே உள்ளன. இந்த திறன் நீர் சுழற்சியை உலகெங்கிலும் உள்ள தண்ணீரை நிரப்ப அனுமதிக்கிறது, குறிப்பாக எமது உயிர்வாழ்வுக்கு வேண்டிய நன்னீரை பராமரிக்கிறது.
ஈரநிலங்கள் நீர் நிரந்தரமாக நிலத்தை மூடும் அல்லது நிலத்தின் மேற்பரப்பில் அல்லது அருகில் வருடத்தில் குறிப்பிட்ட காலத்துக்குஇருக்கும் வாழ்விடங்கள். இந்த நீர்நிலைகள் மண்ணில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன மற்றும் விசேட இசைவாக்கங்களைக் கொண்ட தாவரங்கள் மற்றும் விலங்குகளை அங்கு வாழ அனுமதிக்கிறது.
ஈரநிலங்கள் பெரும்பாலும் மாறும் வாழ்விடங்கள் ஆகும், அங்கு நீர் நிலைகள் வறண்ட நிலையில் இருந்து வெள்ளம் ஏற்பட்டு மற்றும் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும். சதுப்புநிலத் தாவரங்கள், மக்கு நிலப்பரப்புகள், ஈரமான புல்வெளிகள், சதுப்பு நிலங்கள், ஆறுகள் மற்றும் அவற்றின் வெள்ளச் சமவெளிகள், ஏரிகள், டெல்டாக்கள், அடர்வற்ற வனப்பகுதிகள் மற்றும் பவளப்பாறைகள் மற்றும் நெல்-வயல்கள், மீன் குளம் மற்றும் நீர் சுத்திகரிப்பிற்காக உருவாக்கப்பட்ட ஈரநிலங்கள் ஆகியவை ஈரநிலங்களில் அடங்கும். ஈரநிலங்கள் ஒவ்வொரு நாட்டிலும் மற்றும் ஒவ்வொரு காலநிலை மண்டலத்திலும், துருவப் பகுதிகள் முதல் வெப்பமண்டலங்கள் வரையிலும், அதிக உயரத்திலிருந்து வறண்ட பகுதிகள் வரையிலும் உள்ளன.
The video below introduces an example of an important wetland found in Guyana, South America.
கடல் / கடலோர ஈரநிலங்கள்
1. பவளப்பாறை
2. மட்ஃப்ளாட்
3. கண்டல்
4. உவர்களறு
5. கடலோரக் கழி
6. கழிமுகம்
உள்நாட்டு ஈரநிலங்கள்
7. ஆற்று வெள்ளச் சமவெளியில் ஈரமான புல்வெளி
8. ஆற்று வெள்ளச் சமவெளியில் அடர்வற்ற வனப்பகுதி
9. ஏரி
10. சதுப்பு நிலம் / குளம்
11. மக்கு நிலம்
12. குகை
மனிதனால் உருவாக்கப்பட்ட ஈரநிலங்கள்
13.மீன் வளர்ப்பு குளம்
14. நீர்ப்பாசன விவசாய ஈரநிலம் எ.கா. அரிசி நெல்
15. ஆற்றின் குறுக்கே மேய்ச்சல் நிலம்
16. நீர்த்தேக்கம்
17. கால்வாய்
18. நீர் சுத்திகரிப்பு ஈரநிலம்
19. குளங்கள் முதலியவற்றைக் கொண்ட பூங்கா.
ஈரநிலங்கள் வனவிலங்குகளுக்கும் மக்களுக்கும் அதி முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். மனிதர்களும் இயற்கை உலகமும், அதன் அனைத்து பல்லுயிரியலுடனும், ஈரநிலங்களின் ஆரோக்கியமான செயற்பாடு மற்றும் உணவு, நீர் மற்றும் தங்குமிடம், காலநிலை கட்டுப்பாடு மற்றும் வெள்ளம் மற்றும் புயல் பாதுகாப்பு போன்ற இயற்கை அபாயங்கள், மற்றும் ஊட்டச்சத்து சுழற்சி மற்றும் கரிமச் சேமிப்பு போன்ற முக்கியமான செயன்முறைகள் மற்றும் மனிதர்களுக்கு ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வைப் பராமரித்தல் போன்ற கலாச்சார மற்றும் சமூக நன்மைகளையும் அது உள்ளடக்கியுள்ளது.
துரதிருஷ்டவசமாக, வரலாறு முழுவதும் மனித நடவடிக்கைகள், நீர் மற்றும் ஈரநிலங்களில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. 1970 களில் இருந்து, உலகின் ஈரநிலங்களில் சுமார் 35% வடிகால் மற்றும் விவசாயம் அல்லது நகர்ப்புறங்களுக்கு மாற்றுவதன் மூலம் அழிக்கப்பட்டது. மீதமுள்ள ஈரநிலங்கள் மற்றும் அவை வழங்கும் நீர் மாசுபாடு, நீர் வெளியேற்றல் , நீர் திசைதிருப்பல் மற்றும் வளப் பிரித்தெடுத்தல் மூலம் சீரழிந்துள்ளது. பொருத்தமற்ற விவசாயம், தொழில் மற்றும் நகர்ப்புற பகுதிகள் ஈரநிலங்களின் இயற்கை நீர் இயக்கத்தை சீர்குலைக்கின்றன மற்றும் திண்மக்கழிவு மற்றும் கழிவு நீர் மாசுபாட்டின் மூலம் நீரின் தரத்தை எதிர்மறையாக பாதிக்கின்றன மற்றும் உணவுப் பொருட்கள் மற்றும் மரம், கரி மற்றும் மண் போன்ற ஆதாரங்களை நீடித்த பிரித்தெடுத்தல் மூலம் குறைக்கின்றன. மனித நடவடிக்கைகளின் விளைவாக, புவியானது காலநிலை மாற்றம் மற்றும் பல்லுயிர் இழப்பு நெருக்கடிகளை அனுபவிக்கிறது. உதாரணமாக, 1970 ஆம் ஆண்டிலிருந்து வனவிலங்கு இனங்களின் நன்னீர் சார்ந்த தொகை 84% குறைந்துள்ளது. இது நீர் மற்றும் ஈரநிலங்கள் மற்றும் அவை நமக்கும் வனவிலங்குகளுக்கும் வழங்கும் நன்மைகள் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கீழ்நோக்கிய சரிவை மாற்ற, நாம் விவசாயம், தொழில் துறை மற்றும் நகரமயமாக்கலை எப்படி அணுகுகிறோம் என்பதை மாற்ற வேண்டும். ஈரநிலங்கள் மற்றும் நீர் முகாமைத்துவத்தில் எதிர்மறையான தாக்கங்களைத் தவிர்ப்பதற்காக ஈரநிலம் மற்றும் நீர் முகாமைத்துவத்தில் சிறந்த நடைமுறைகளை அடையாளம் கண்டு பகிர சமூகங்களாக நாம் ஒன்று சேர வேண்டும்.
This video, by IWMI, provides an example of the urban wetlands of Colombo, Sri Lanka and the relationship they have with the people that live and work in the city.
Now, after having finished this book, make sure to go back to the main page and complete activity 1.