பங்கேற்பு நுட்பங்கள் பற்றிய அறிமுகம்

5. முறைசாரா கலந்துரையாடல்

Illustration of people sat under a tree talking

அது என்ன?
  • அதிகமாகவோ அல்லது குறைவாகவோ குறித்த விடயம் சம்பந்தமான உரையாடல். இது முன் வரையறுக்கப்பட்ட கேள்விகளைப் பின்பற்றாது; "ஓப் த ரெக்கார்ட்" (பதிவுக்குள் வராத) என்று கருதலாம்.


அதை எப்போது பயன்படுத்த வேண்டும்?
  • முறைசாரா கலந்துரையாடல்கள் எந்த நேரத்திலும் எல்லா இடங்களிலும் நடக்கும்.
  • சமூக ஈடுபாட்டு செயன்முறையின் ஆரம்பத்தில்: முன்னெடுப்பின் குறிக்கோள்களை ஒரு நபருக்கு முன்வைக்க, அவருடைய கருத்தை கேற்க; சூழல் மற்றும் மக்களை முறைசாரா வழியில் தெரிந்து கொள்ள. முறைசாரா கலந்துரையாடல்கள் மிகவும் கட்டமைக்கப்பட்ட நேர்காணல்களின் வரையறையின் முதல் கட்டமாக இருக்கலாம்.
  • சமூக ஈடுபாட்டு செயன்முறையின் போது: பலவிதமான தகவல்களையும், பெரும்பாலும் எதிர்பாராத தகவல்களையும் அனுமதிக்கிறது. இந்த முறைசாரா சூழலில் மக்கள் தங்கள் சந்தேகங்களை அல்லது பிரச்சனைகளை தெரிவிக்கலாம்.
  • சமூக ஈடுபாட்டு செயன்முறையின் முடிவில். ஒரு பெரிய குழுவின் அழுத்தம் இல்லாமல் முன்முயற்சி குறித்து மக்களின் கருத்துக்களைப் பெற.


மக்களின் எண்ணிக்கை
  • பொதுவாக ஒரு குறைந்த எண்ணிக்கை, 4 க்கும் குறைவாக.


நேரம்
  • வேறுபடலாம்..


பயன்கள்
  • முறையான சூழலில் அசௌகரியமாக உணர்ந்த மக்களின் குரலைக் கேட்பது.
  • நீங்கள் ஒரு முன் வரையறுக்கப்பட்ட முறையான கட்டமைப்பிற்குள் இல்லாத தகவலைப் பெறுதல்.
  • நேர்காணல் செய்பவர்களுடன் அதிக நல்லுறவு மற்றும் நம்பிக்கையை வளர்த்தல்.


வரையறைகள்
  • "ஓப் த ரெக்கார்ட்" சூழல் தகவலின் முறையான மற்றும் துல்லியமான பதிவு மற்றும் இறுதிப் பயன்பாட்டை மட்டுப்படுத்தலாம். நீங்கள் தகவலை முக்கியமானதாகக் கண்டறிந்து அதை அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்த விரும்பினால், ஒப்புதல் கேட்கவும், மற்றும்/அல்லது ஒரு பின்தொடர்தல் நேர்காணலுக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது மேலும் முறையான செயலமர்வுகளில் அவர்களைப் பங்கேற்கச்செய்யலாம்.
  • எதிர்வுகூற முடியாத தன்மை.