ஒரு சமூகம் என்பது தெளிவாக அடையாளம் காணப்பட்ட தனிநபர்களின் குழுவாகும். அது ஒன்றுபட்டு ஒரு சமூகமாக தங்களை அடையாளப்படுத்துகிறது. மக்கள் ஒருவருக்கொருவர் அருகில் வாழும்போது, ஒரே மாதிரியான இனம் அல்லது நம்பிக்கைகளைக் கொண்டிருக்கும்போது அல்லது ஒத்த ஆர்வங்களைக் கொண்டிருக்கும்போது தம்மை ஒரு சமூகமாக கருதலாம். மக்கள் ஒருவரை ஒருவர் சார்ந்தவர் என்ற உணர்வையும் பகிரப்பட்ட புரிதலையும் கொண்டிருக்கும்போது ஒரு சமூகம் உருவாகிறது. இருப்பினும், ஒரு சமூகம் என்ற எண்ணக்கரு ஓரளவு மாற்றமடையக்கூடியது மற்றும் எந்தவொரு நபரும் ஒரே நேரத்தில் பல சமூகங்களின் பகுதியாக இருக்கலாம். உதாரணமாக, நீங்கள் உங்கள் புவியியல் அமைவிடத்தின் அடிப்படையில் அல்லது ஒரு கிராமத்தின் பகுதியாக ஒரு சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம், ஆனால் அதே நேரத்தில் நீங்கள் உங்கள் இனத்தின் அடிப்படையில் மற்றொரு சமூகத்தின் பகுதியாக இருக்கலாம்.
கடந்த காலத்தில், பெரும்பாலான சுற்றுச்சூழல் கண்காணிப்புகள் ஆய்வு நடந்த சமூகத்தின் சிறிய அளவிலான ஈடுபாடு கூட அல்லது ஈடுபாடு இல்லாமலேயே மேற்கொள்ளப்பட்டது. சமீபத்திய ஆண்டுகளில் குடிமக்கள் அறிவியல் திட்டங்கள் மிகவும் பிரபலமாகிவிட்டன, இருப்பினும், அவர்கள் பெரும்பாலும் விஞ்ஞானிகள் தலைமையிலான மேலிருந்து-கீழ் அணுகுமுறையைப் பயன்படுத்துகின்றனர், சமூகம் தரவு சேகரிப்பில் மட்டுமே ஈடுபடுத்தப்படுவதுடன், கண்காணிப்புத் திட்டத்தின் வடிவமைப்பு, பகுப்பாய்வு மற்றும் அறிக்கையிடலில் சேர்க்கப்படவில்லை. சமூகக் கண்காணிப்பு என்பது சமூகங்களால் உருவாக்கப்பட்டு மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு ஆகும். கண்காணிப்புத் திட்டத்தின் திட்டமிடல், செயற்படல், அவதானித்தல் மற்றும் மதிப்பீடு ஆகியவற்றில் சமூக உறுப்பினர்களின் பரவலான பங்கேற்பை இது ஊக்குவிக்கிறது.
ஒரு பிரச்சனையை தீர்ப்பதற்கு சமூகத்தை ஈடுபடுத்துவதில் சமூக கண்காணிப்பு மிகவும் வெற்றிகரமாக ன அணுகுமுறை ஆகும். ஏனென்றால், அவர்கள் கண்காணிப்பில் தீவிரமாக ஈடுபடுகின்றனர் என்ற வகையில் பிரச்சனை பற்றிய அறிவும் எதனால் அது ஏற்பட்டது என்ற விழிப்புணர்வும் அந்த சமூகத்திற்கு அதிகமாக இருக்கும். கண்காணிப்பை மேற்கொள்ளும் செயற்பாடானது சமூகத்தை ஒன்றிணைக்கிறது, இது கண்காணிக்கப்படும் சிக்கலை தீர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க உதவுகின்றது.
அறிமுகம்
சமூகக் கண்காணிப்பு என்பது சமூகங்களினாலேயே உருவாக்கப்பட்டு மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு ஆகும். கண்காணிப்புத் திட்டத்தின் வடிவமைப்பு, செயற்படுத்தல், அறிக்கையிடல் மற்றும் மதிப்பீடு ஆகியவற்றில் சமூக உறுப்பினர்களின் பரவலான பங்கேற்பு ஊக்குவிக்கப்படுகிறது (அலகு 4 இல் கலந்துரையாடப்பட்டது). ஒரு கண்காணிப்புத் திட்டத்தை உருவாக்கும் போது சமூக அணுகுமுறையைப் பயன்படுத்துவதன் நன்மைகளை அறிமுகப்படுத்துவதும், அதை எவ்வாறு திட்டமிடுவது, செயற்படுவது, அவதானிப்பது மற்றும் மதிப்பீடு செய்வது என்பதற்கான வழிகாட்டுதல்களை வழங்குவதே இந்த அலகின் நோக்கங்கள் ஆகும்.