நீர் மற்றும் ஈரநிலங்களுடனான எங்கள் உறவு குறித்த பாடப் பகுதியைப் பார்வையிட கீழே உள்ள புத்தக ஐகனைக் கிளிக் செய்யவும்.
செயற்பாடு 1
உங்களுக்குத் தெரிந்த ஈரநிலத்தைப் பற்றி சிந்தியுங்கள். அது என்ன நன்மைகளை வழங்குகிறது? உங்களுக்குத் தெரிந்ததிலிருந்து அது எப்படி மாறியது, அது என்ன சவால்களை எதிர்கொள்கிறது? இந்த ஈரநிலத்தை நினைக்கும் போது உங்களுக்கு என்ன உணர்வு வருகின்றது? உங்கள் மனதில் என்ன குறிப்பிட்ட படங்கள் அல்லது நினைவுகள் வருகின்றன?
அறிமுகம்
நீர் மற்றும் ஈரநிலங்கள் வாழ்க்கைக்கு அடிப்படையானதாகும். நாம் அவைகளுடன் எவ்வாறு உறவாடுகிறோம் என்பதும் நாம் பின்பற்றும் முகாமைத்துவ அணுகுமுறைகளும் நமது ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வையும், சுற்றுச்சூழலையும் பாதிப்பவையாகும். சமூக முகாமைத்துவம் என்பது சமூகம் எதிர்கொள்ளும் சமூக மற்றும் சுற்றுச்சூழல் சவால்களுக்கு ஒரு தீர்வை வழங்கும் முகாமைத்துவ அணுகுமுறையை நடைமுறைப்படுத்துவதாகும். இது ஒரு சமூகத்தால் உருவாக்கப்பட்டு செயற்படுத்தப்படுகிறது. மிகவும் வலுவான சமூக முகாமைத்துவ அணுகுமுறைகளை அடையாளம் காண்பது முக்கியமானதாகும். சமூகத்திற்கு நன்மை பயக்கும், நியாயமான மற்றும் சுற்றுச்சூழலில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தாததால், இந்த அணுகுமுறைகளை சமூகத்திற்குச் சொந்தமான தீர்வுகள் என்று அழைக்கிறோம். இந்தப் பிரிவின் குறிக்கோள் நீர் மற்றும் ஈரநிலங்களுடனான எங்கள் உறவை ஆராய்வது, சமூக முகாமைத்துவத்தை அறிமுகப்படுத்துவது, சமூகத்திற்குச் சொந்தமான தீர்வுகளை எவ்வாறு அடையாளம் காண்பது என்பதை கலந்துரையாடுவது மற்றும் சமூகத்திற்குச் சொந்தமான தீர்வுகளை எவ்வாறு செயற்படுத்துவது மற்றும் மதிப்பீடு செய்வது என்பதைப் பார்ப்பது ஆகும்.