நீர் மற்றும் ஈரநிலங்களுடனான நமது உறவு
2. ஈரநிலங்கள்
2.2. ஈரநில நன்மைகள்
ஈரநிலங்கள் வனவிலங்குகளுக்கும் மக்களுக்கும் அதி முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். மனிதர்களும் இயற்கை உலகமும், அதன் அனைத்து பல்லுயிரியலுடனும், ஈரநிலங்களின் ஆரோக்கியமான செயற்பாடு மற்றும் உணவு, நீர் மற்றும் தங்குமிடம், காலநிலை கட்டுப்பாடு மற்றும் வெள்ளம் மற்றும் புயல் பாதுகாப்பு போன்ற இயற்கை அபாயங்கள், மற்றும் ஊட்டச்சத்து சுழற்சி மற்றும் கரிமச் சேமிப்பு போன்ற முக்கியமான செயன்முறைகள் மற்றும் மனிதர்களுக்கு ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வைப் பராமரித்தல் போன்ற கலாச்சார மற்றும் சமூக நன்மைகளையும் அது உள்ளடக்கியுள்ளது.
- ஈரநிலங்கள் அனைவருக்கும் நன்னீரை உறுதி செய்கின்றன - அவை சுத்தமான தண்ணீரை வழங்குகின்றன
- ஈரநிலங்கள் தீங்கு விளைவிக்கும் கழிவுகளை தண்ணீரிலிருந்து வடிகட்டுகின்றன - அவை மாசுபாட்டை சுத்திகரிக்கின்றன
- ஈரநிலங்கள் கரிமத்தைச் சேமித்து, காலநிலை மாற்றத்தைத் தணிக்கும்
- ஈரநிலங்கள் பல்லுயிரியலுக்கு முக்கியமானவை
- ஈரநிலங்கள் எங்களின் உணவு விநியோகத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. உதாரணம்: மீன் மற்றும் அரிசி போன்ற தாவரங்கள்
- ஈரநில தாவரங்கள் எரிபொருள் மற்றும் நார்ச்சத்துக்காக அறுவடை செய்யப்படுகின்றன
- ஈரநிலங்கள் வாழ்வாதாரத்தை தக்கவைத்துக்கொள்கின்றன உதாரணம்:சுற்றுலா
- வெள்ளப்பெருக்கு சமவெளிகள், ஏரிகள் மற்றும் சதுப்பு நிலங்கள் வெள்ள நீரை உறிஞ்சும்
- ஏரிகள், குளங்கள் மற்றும் சதுப்பு நிலங்கள் நிலத்தடி நீர்மட்டத்தை பராமரிக்கவும், வறட்சியை தடுக்கவும் முடியும்
- கடலோர ஈரநிலங்கள் கரையோர அரிப்பை தடுக்கலாம்
- கடலோர ஈரநிலங்கள் அலை மற்றும் சூறாவளி பாதிப்புகளிலிருந்து புயல் சேதத்தை குறைக்கலாம்
- ஈரநிலங்கள் பொழுதுபோக்கு மற்றும் கலாச்சார நடவடிக்கைகளுக்கு முக்கியமான இடங்கள்