4.2 சுற்றுச்சூழல் தரவுகளைச் சேகரிக்க நீங்கள் என்ன பயன்படுத்தலாம்
4. ஒரு சென்சர் மூலம் பதிவுசெய்தல்
சில சுற்றுச்சூழல் மாற்றங்கள் நிலத்தடி நீர் மட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற மிக நீண்ட காலங்களில் மிக மெதுவாக நிகழலாம், மற்றவை குறுகிய காலத்திற்கு மிக விரைவாக நிகழ்கின்றன, (மழைக்காலத்திற்குப் பிறகு மாசுபாடு ஆற்றில் கழுவப்படுவது போன்று) அல்லது நடு இரவில் போன்ற பார்வையாளர் அங்கு இருப்பது கடினமான நேரங்களில், இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் மாற்றங்களைப் பதிவு செய்ய சென்சர் பயன்படுத்துவது ஒரு பயனுள்ள நுட்பமாகும். காற்று அல்லது நீரின் தரத்தில் ஏற்படும் மாற்றங்கள், நீர் நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் வனவிலங்குகள் இருப்பதைக் கண்டறிய, போன்ற பலவித சுற்றுச்சூழல் மாற்றங்களை கண்டறிய சென்சர்கள் பயன்படுத்தப்படலாம். சென்சர்கள் ஒவ்வொரு மணிநேரமும் தரவை சேகரிக்கலாம் அல்லது சுற்றுசூழலில் மாற்றம் ஏற்படும் நேரங்களில் அவை தூண்டப்படும் போது மட்டுமே தரவை சேகரிக்கலாம். ஒரு சென்சர் தரவு பெரும்பாலும் அட்டவணை அல்லது வரைபடத்தில் வழங்கப்படுகிறது.
பின்பற்ற வேண்டிய கட்டங்கள்:
- அளவிடும் கருவியை நிறுவவும்
- ஒரு சென்சரை நிறுவவும்
- கணினியில் தரவைப் பதிவிறக்கவும்
- முடிவுகளைப் பார்த்து, ஒரு வரைபடத்தை அல்லது தரவு அட்டவணையை உருவாக்கவும்