4.2 சுற்றுச்சூழல் தரவுகளைச் சேகரிக்க நீங்கள் என்ன பயன்படுத்தலாம்
7. சமூக சுற்றுச்சூழல் அறிவை சேகரித்தல்
சுற்றுச்சூழல் மாற்றத்தைப் புரிந்துகொள்ள மிகவும் பயனுள்ள நுட்பம், குறிப்பாக கடந்த காலத்துடன் ஒப்பிடும் போது, ஒரு பகுதியில் வாழும் மக்களிடமிருந்து தகவல்களைச் சேகரிப்பதாகும். வெள்ளத்தின் தன்மை எப்படி மாறியது, வனவிலங்குகளின் எண்ணிக்கை எப்படி மாறியது மற்றும் நில முகாமைத்துவ நடைமுறைகள் எப்படி மாறியது போன்ற சுற்றுச்சூழல் மாற்றங்களை மக்கள் பெரும்பாலும் அறிவார்கள். மக்களை நேர்காணல் செய்வது, எடுத்துக்காட்டாக, வெள்ளம் எவ்வளவு ஆழமாக இருக்கும், வெள்ளம் பொதுவாக ஏற்படும் போது, உண்மையில் எந்த பகுதிகளில் ஏற்படும் போன்ற மிகவும் பெறுமதியான தகவல்களை பெற முடியும். இந்தத் தகவலைச் சேகரிப்பது, உங்கள் சொந்த அவதானிப்புகள் மற்றும் ஆய்வுகளை மேற்கொள்வதோடு மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் மாற்றங்களின் அடிப்படையில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி முழுமையாக அறிய உதவுகிறது.
பின்பற்ற வேண்டிய கட்டங்கள்:
- ஒரு கேள்விக்கொத்தைத் தயார் செய்யவும்
- மக்களை நேர்காணவும்
- கணினியில் தகவலை உள்ளிடவும்
- முடிவுகளைப் பார்த்து தரவு அட்டவணை, விளக்கம் அல்லது வரைபடத்தை உருவாக்கவும்
Now, after having finished this book, make sure to go back to the main page and complete activity 2.