தாக்க மதிப்பீடு

4. கட்டம் 3 - கண்காணிப்பு

தொடர்ச்சியான கண்காணிப்பு: ஒரு சமூகத்திற்குச் சொந்தமான தீர்வின் ஈடுபாடு அல்லது நடைமுறைப்படுத்தல் நடந்து கொண்டிருக்கும்போது, ஈடுபாடு ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தத் தொடங்குகிறதா, மற்றும் ஏதேனும் சவால்கள் அல்லது பிரச்சனைகள் நடக்கிறதா (இதனால் திட்டத்தை மாற்ற வேண்டிய தேவை உள்ளதா) என்பதைப் புரிந்து கொள்வது முக்கியம். செயலமர்வுகள் மற்றும் முகாமைத்துவ மாற்றங்களை நடைமுறைப்படுத்துதல் போன்ற செயற்பாடுகளுக்குப் பிறகு கருத்துக்களைச் சேகரிப்பது பெறுமதியானது. ஒரு நாட்குறிப்பை வைத்திருக்க சமூகக் குழுவை ஊக்குவிப்பது ஒரு நல்ல யோசனையாகும், மேலும் விடயங்கள் எப்படி நடக்கிறது என்பதை மதிப்பிடுவதற்கு சமூக உறுப்பினர்களுடன் நேர்காணல்களை மேற்கொள்வது பயனுள்ளதாக இருக்கும்.

Two people looking at a form they are filling in where they are evaluating something

எத்தனை முறை நீங்கள் கண்காணிப்பை மேற்கொள்கிறீர்கள் மற்றும் நீங்கள் அதை எப்படி செய்கிறீர்கள் என்பது இடம்பெறும் சமூகத்திற்குச் சொந்தமான தீர்வின் ஈடுபாடு அல்லது செயற்பாட்டின் வகையைப் பொறுத்தது. எத்தனை முறை கண்காணிப்பு நடைபெறுகிறது என்பதன் அடிப்படையில், நீங்கள் எந்த மாற்றங்களையும் கவனிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்த இது அடுத்தடுத்து இடம்பெற வேண்டும். பங்கேற்பு வீடியோவைப் பயன்படுத்தி நேர்காணல்களை எவ்வாறு மேற்கொள்வது (அலகு 2 இல் இதைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்வீர்கள்), மாற்றத்தைப் பதிவு செய்வதற்கான ஒரு சிறந்த வழியாகும்.

உதாரணம் 1 - ஈடுபாட்டின் தாக்கம்

சமூகத்திற்குச் சொந்தமான தீர்வு அணுகுமுறையைப் புரிந்துகொள்ளும் நிலை மற்றும் முடிவெடுப்பதில் கூட்டாகப் பாதிக்கும் மேம்பட்ட திறன் உள்ளதா என்பதைத் தீர்மானிக்க, சமூகத்திற்குள், தேர்ந்தெடுக்கப்பட்ட சமூக உறுப்பினர்களுடனான நேர்காணல்கள் ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் 2 வருட காலப்பகுதியில் மேற்கொள்ளப்படலாம். இது புரிதலில் மாற்றத்தைத் தீர்மானிக்க அனுமதிக்கும்.

உதாரணம் 2 - சமூகத்திற்குச் சொந்தமான தீர்வை நடைமுறைப்படுத்துதல்

நெல் அறுவடை பேணப்பட்டுள்ளதா மற்றும் வெள்ளம் குறைக்கப்பட்டதா என்பதைத் தீர்மானிக்க, அறுவடை மற்றும் வெள்ள நிகழ்வுகளைத் தொடர்ந்து விவசாயிகளை நேர்காணல் செய்து புதிய முகாமைத்துவ அணுகுமுறை எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதைத் தீர்மானிக்கலாம்.

உதாரணம் 3 - கலாச்சார அடையாளத்தைத் தக்கவைத்துக்கொள்ள சமூகத்திற்குச் சொந்தமான தீர்வை நடைமுறைப்படுத்துதல்

இளைஞர்களுக்கு பாரம்பரிய கலை, இசை மற்றும் நடனம் பற்றிய அறிவு இருக்கிறதா என்பதை அறிய, சமூகத்தின் முக்கிய கலாச்சார அம்சங்களைப் பற்றி அறிவார்களா என்பதைத் தீர்மானிக்க சமூகம் முழுவதும், ஒரு நிகழ்வுக்கு முன்னும் பின்னரும் சில மாதங்களுக்கு பின்னும் இளைஞர்களை நேர்காணல் செய்ய சமூகம் முடிவு செய்துள்ளது.