பங்கேற்பு காட்சி நுட்பங்கள்
2. பங்கேற்பு புகைப்படம்
அது என்ன?
- புகைப்படங்கள் மூலம் பிரச்சினைகள் அல்லது நடைமுறைகளின் பிரதிநிதித்துவம். இவற்றைத் தொகுக்கலாம் (எழுதப்பட்ட உரையுடன் அல்லது இல்லாமல்) ஒரு புகைப்படக் கதையின் வடிவத்தில் ஒரு கதையைச் சொல்ல.
அதை எப்போது பயன்படுத்த வேண்டும்?
- குறிப்பிட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க, தனித்தனியாகவோ அல்லது குழுவாகவோ - புகைப்படங்களை எடுப்பது ஒரு குறிப்பிட்ட பிரச்சினை/கவலையை பிரதிநிதித்துவப்படுத்த மக்களை அனுமதிக்கலாம்.
- ஒரு செயற்பாட்டின் வெளியீடுகளை மற்ற குழுக்கள்/ சமூகங்களுடன் பகிர்ந்து கொள்ள (உதாரணமாக ஒரு புகைப்படக்களம் மூலம்).
- ஒரு சமூகத்திற்குச் சொந்தமான தீர்வு, ஒரு குறிப்பிட்ட குறிகாட்டி, தொடக்க நிலை, ஒரு சிறந்த நடைமுறை போன்றவற்றை ஆவணப்படுத்த
நன்மைகள்
- எழுத்துடன் ஒப்பிடுகையில் இன்னும் தெளிவான மற்றும் வளமான தகவல்களை அளிக்க முடியும்.
- புகைப்படங்களில் கருத்து தெரிவிப்பது குழு விவாதத்தை ஊக்குவிக்கும்
வரையறைகள்
- தொழில்நுட்ப மற்றும் ஒப்பீட்டளவில் விலை உயர்ந்த பொருட்களின் தேவை: கேமராக்கள், பிரிண்டர், கணினி.
- கணினிகளின் பயன்பாடு தேவைப்பட்டால், பங்கேற்பாளர்கள் கல்வியறிவு பெற்றிருக்க வேண்டும்
வடக்கு ருபுனுனி, கயானாவில் உள்ள ரூபர்டீ சமூகத்துடன் தயாரிக்கப்பட்ட புகைப்படக் கதையை எடுத்துக்காட்டும் படங்கள், சமூகத்தின் நம்பகத்தன்மையின் சில அம்சங்களை விளக்குகின்றன.
எமது அடிப்படைத் தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்கிறோம்? நிலம் அச்சமூகத்திற்கு அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கான பல்வேறு ஆதாரங்களை வழங்கியது, அதாவது சிங்கிள்ஸ் மற்றும் கோக்ரைட் இலைகள் வீடுகளுக்கான கூரையினையும் மரவள்ளிக்கிழங்கு போன்ற பாரம்பரிய உணவுகளான மரவள்ளிக்கிழங்கு ரொட்டி மற்றும் உள்ளூர் பானமான காசிரியை தயாரிப்பதற்கான காசிரி உருளைக்கிழங்கு ஆகியவற்றை நடுவதற்கான விவசாய நிலங்களையும் வழங்கியது.
எமது அடையாளத்தை நாம் எப்படி பேணுகிறோம்? மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்களை உயிர்ப்புடன் வைத்திருக்க, சமூகம் ஒரு கலாச்சார கற்றல் மையத்தை நிறுவியுள்ளது; மொழி, கைவினைக் கலை, கதைகள், பாடல்கள் மற்றும் நடனம் உள்ளிட்ட உள்ளூர் மரபுகள் மற்றும் கலாச்சாரத்தை இளம் தலைமுறையினருக்கு இங்கே கற்பிக்கப்படுகிறது.
எது எமக்கு தெரிவையும் நெகிழ்வுத்தன்மையையும் அளிக்கிறது? வயிற்றுப்போக்குக்கு சிகிச்சையளிக்க கொய்யா மற்றும் முந்திரி பட்டை கலவை போன்ற நவீன மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மருந்துகளால் சமூக உறுப்பினர்கள் தங்கள் ஆரோக்கியத்தை பேணுகின்றனர். உள்ளூர் கிளினிக்குகள் சிறுவர் சுகாதாரம் மற்றும் பல் மருத்துவம் போன்ற சேவைகளை வழங்குகின்றன.